நாணயத்தை இழந்தவன் உலகத்தின் கண்களுக்கு
செத்தவனாகவே கருதப்படுகிறான்
வாழும் வாழ்க்கையில்
நேர்மை எது
நாணயம் எது
லட்சியம் எது
நிதானம் எது
என்பது அவன் மனதை
அறிந்தாலே புரிந்து விடும்
பார்க்கும் பார்வையில் நேர்மை
நினைக்கும் நினைப்பில் துய்மை
வாழும் வாழ்வில் எளிமை
செய்யும் செயலில் இனிமை
என்பதை இழந்தவன்
நாணயத்தை இழந்தவன் உலகத்தின் கண்களுக்கு
செத்தவனாகவே கருதப்படுகிறான்
எழுவாய் கதிரவனின் வேகத்திலே
உனை சுற்றி இருப்பவர்களோ உன் சுழற்சி வேகத்திலே
விழுவார் பார்க்கும் பார்வையிலே
நீ பறப்பாய் வேலையிலே
இருப்பாய் நேர்மையிலே நடப்பாய் தூய்மையிலே
துணிவாய் நடப்பாய் உன் பாதையிலே
பார்ப்போர்கள் மனம் பரபரக்கும் சூழலிலே
உனை பெற்றவர்கள் தவம் கிடந்தார்களா
என உலகமே வியக்கையிலே
பொழிந்தது வானம் விளைந்தது பூமி என்பதன்
பொருளுக்கேற்ப தூய்மையான
மனம் கொண்ட தாய் தந்தையர்களுக்கு
ஒளி காட்டும் சூரியனே நீ.
இங்கு நீ என்பதே நான்
தங்கையும் நானும் மழலையில் விளையாடிய
மாமரத்துக் கீழே மாம்பழத்தின் மணமும்
என் தங்கையின் விளையாட்டு குணமும்
என் மனதில் என்றும் மாறாத மணம்
மங்கையாகிய என் தங்கை பற்றிய என் மனதின் ஆசை
அவள் விரும்பவதை மறுக்காமல் தர ஆசை
திருமணம் என்ற காலம் வந்ததும்
அவள் மனதிற்கு ஏற்ப முடிவு செய்ய என் ஆசை
ஆனால் தங்கையின் இறுதி ஆசை அண்ணனின் முடிவே
தாய்தந்தையால் தீர்வு செய்வதே அண்ணனின் ஆசை
மணமகனை பெரியவர்களாய் தேர்வு செய்ததும் தங்கை
அண்ணா உன் முடிவு தான் எனக்கு என்றது அவள் வாஞ்சை
அன்று நான் கூறிய வார்த்தையை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்ட என் தங்கை
அவள் ஆசையை தவிர்த்து அண்ணனுக்காக
ஏற்றுக் கொண்ட என் தங்கை
திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள்
இரண்டு மாத குழந்தையுடன் தங்கையை
விதவை கோலத்தில் கண்ட அண்ணனின் மனது
தங்கை குழந்தையுடன் தவிக்கும் தவிப்பையும்
இனி என் வாழ்வில் ஏது ஒளி என் குழந்தைக்கு ஏது வழி
என்ற நிலையில் விடை தெரியாமல் தவிக்கும் அண்ணனின் வலி
பள்ளிக்கூடம் என்பது
என் வாழ்வின் வரலாற்றில் ஆயுள்கூடம்
ஆடல்களும் பாடல்களும் நிரம்பிய நினைவுக்கூடம்
உடன் பயிலும் நண்பர்களுடன்
நேற்று தொலைக்காட்சியில் கண்டதை
உரையாடும் கூடலில் ஒரு ஆனந்த கூடல்
ஆசிரியரை கண்டதும் ஓர் அதிர்வுக்கூடல்
பாடங்களை படிக்கையிலே
சத்துணவு சமையலின் மணக்கும்
மணத்தின் மீது ஓர் ஆர்வக்கூடல்
உணவு உண்ண செல்லும் போது நண்பர்களுடன்
நீயா நானா என்ற ஓர் ஆர்வக்கூடல்
வரிசையில் உட்கார்ந்து உண்ணச்செல்லும் போது
ஆசிரியரின் கூறும் வாழ்த்துப்பாடல்
உண்டு முடித்த இடைவேளையில்
மகிழ்ச்சி பொங்கும் விளையாட்டுக்கூடல்
உணவு இடைவேளைக்கு பின்
பள்ளியறைக்கு செல்லும் போது
மாலைநேரத்தை எதிர்பார்க்கும் மகிழ்ச்சிக்கூடல்
மாணவ நண்பர்களுக்குள் ஊமை விளையாட்டுக்கூடல்
ஆசிரியர் தேடல்கூடல் முடிவதற்கு முன்பாவே
பள்ளியின் மாலை மணி ஓசை கேட்டதும்
நண்பர்களுக்குள் மகிழ்ச்சி ஒலியுடன்
நீயா நானா என போட்டியிட்டு ஓடி
முதலில் வீட்டுக்கு செல்வது நானே
இரண்டாம் உலகம் உருட்டிய செல்வராகவன் அவர் அடுத்த திரைக்கு நினைத்த உலகத்தை உருட்டுவதற்காக நினைத்திருப்பதே ஒரு சில எழுத்துக்களில் கூறலாம், ஆனால் அது கூடுவது மிகக் கடினம். ஆனால் அவர் மனதில் தோன்றுவது ஆணி போல ஒரே எழுத்து கூறுங்கள்
விடிந்தும் விடியாமல்
கண் தெரிந்தும் தெரியாமல்
கரை கடந்தும் காணாமல்
கடக்கும் கண்கள்
காணும் மூன்றாம் கண்ணே
விடியல்
-------------------------------------
மணம் என்னும் மனம்
மணம் என்னும் மயக்கத்தில்
மாட்டி தவிக்கும்
மனித மனம் போல்
மனம் ஏங்கும் தூரல்
குழப்பத்தின் சாரல்
என்ன என்ன என்ன
------------------------------------
மனவலி
என் மனம் என்பது
ஒரு வெறிபிடித்த ஊற்று
அதில் சாக்கடை போல் கலக்கும்
ஒரு ஆதங்கம்
அதை நான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
எங்கு கூற இறைவா இறைவா
--------------------------------------
கணவனின் இன்பவலி
இடை என்னும் உன் இடையில்
இடையில்
மாட்டிக் கொண்டு தவிக்கும்
மடையன் ஆனேனடி
என் கவிதைகளை பிரசுரிக்க ஒரு தளம் தேவைப்பட்டது. நண்பன் ஆரூரின் உதவியால் பதிவிட துவங்குகிறேன். நன்றி நாளை முதல் என் கவிதைகள் நாளை முதல் என் கவிதைகள் உங்கள் பார்வைக்கு.
பிரபல பதிவர்களுடன் நான்
எனது இயற்பெயர் வெங்கடேஷ். இந்த ஆண்டு பதிவர் சந்திப்புக்கு வந்த போது மற்றவர்களால் போலி பன்னிக்குட்டி என்று கலாய்க்கப்பட்டதால் அந்த பெயரையே வைத்துக் கொண்டு விட்டேன்.
தாங்கள் கொடுக்கப்போகும் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே.