Monday 17 February 2014

ஒளிகாட்டும் சூரியனே

பிறந்தாய் பூமியிலே வளர்ந்தாய் சூழலிலே
சுழல்வாய் வாழ்க்கையிலே சூழ்நிலையோஉன் காலடியிலே
காண்பாய் காலையிலே கதிரவனின் கனல் கூடக்கூட
அதன் குமுறலின் கூடலிலே

எழுவாய் கதிரவனின் வேகத்திலே
உனை சுற்றி இருப்பவர்களோ உன் சுழற்சி வேகத்திலே
விழுவார் பார்க்கும் பார்வையிலே
நீ பறப்பாய் வேலையிலே

இருப்பாய் நேர்மையிலே நடப்பாய் தூய்மையிலே
துணிவாய் நடப்பாய் உன் பாதையிலே
பார்ப்போர்கள் மனம் பரபரக்கும் சூழலிலே
உனை பெற்றவர்கள் தவம் கிடந்தார்களா
என உலகமே வியக்கையிலே

பொழிந்தது வானம் விளைந்தது பூமி என்பதன்
பொருளுக்கேற்ப தூய்மையான
மனம் கொண்ட தாய் தந்தையர்களுக்கு
ஒளி காட்டும் சூரியனே நீ.
இங்கு நீ என்பதே நான்

போலி பன்னிக்குட்டி

1 comment:

  1. /// இருப்பாய் நேர்மையிலே... நடப்பாய் தூய்மையிலே...
    துணிவாய் நடப்பாய் உன் பாதையிலே... ///

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete