Tuesday 14 January 2014

ரசங்களில் சிறந்தது

மனிதனின் மனதில் ஓடுவதோ
மிக இனிதான மகிழ்ச்சிரசம்
அதை நினைக்கையிலே
உள்ளுக்குள்ளே பரவசம்

அதை கெடுப்பதும் வளர்ப்பதும்
மனைவியின் மனரசம்
அவளுக்காக நான் நினைப்பதோ
ஒரு கோடி நினைரசம்

அறியாத மனைவியை நினைத்தாலே
உள்ளுக்குள்ளே பதைபதைப்புரசம்
அதை எப்படி புரியவைப்பது என்று
புரியாத குழப்பரசம்

ரசத்திலே சிறந்தது என்னவென்று
கேட்டால் நீ என்ன கூறுவாய்
நானறியேன் ஆனால் நான் கூறுவேன்
சிறந்த பழங்களின் தொகுத்த
பழரசம் தானென்று

என் மனைவியோ கூறுவாள்
வீணாப் போன பழரசமே நான் தான் என்று
என் வலியை நான் யாரிடம் கூறுவேன்
பராபரமே

3 comments:

  1. அடடா...! வித்தியாசமான ரசங்கள்... சிந்தனை வரிகளுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete