Monday 9 March 2015

கடவுளிடம் கோரிக்கை

கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் கூறனுமாம்
கூறியது யாரிடமாம்
கடவுளிடம் சேர்ந்திடுமா

போலி பன்னிகுட்டி

Tuesday 20 January 2015

மூளையில்லாத பெண்ணொருத்தி

மூளையில்லாத பெண்ணொருத்தி
மூலையில் உட்கார்ந்து யோசித்தாளாம்
அவள் யோசித்த யோசனையே
மூலையில் இருக்கிறது என்று
அவள் அப்போது தான் புரிந்து கொண்டாளாம்
அவள் மண்டையின் கதவு
அப்போது தான் திறந்தது

Thursday 3 April 2014

உள் உணர்வு ஆயிரம் மன நிறைவு ஓரிடம்
ஓரிடத்தை மறுக்க முடியாமல் உணர்வை கட்டுப்படுத்த முடியாமல்
கலங்குவதோ கடமையை மறுக்க முடியாமல் மணக்கும் மல்லிகைப் போல் ஓரிடம் மதில் ஏற்க முடியாமல் தவிக்கும் ஏக்க தவிக்கும் மனம் அவளிடம்
எனை மறக்க முடியாமல் தவிக்கும் மனமோ அவளிடம்

அவளை ஏற்க முடியாமல்0,,,,,0

Thursday 27 March 2014

என் மனதில் சிறந்த நாட்கள்


நான் பள்ளி செல்கையில் பேனா நோட்டு புத்தகம்
பெற்றோர் வாங்கிக் கொடுத்தது சிறந்த நாட்கள்
நண்பர்களிடம் காண்பித்து மகிழ்ந்தது சிறந்த நாட்கள்
ஊருக்கு செல்லும் போது ஜன்னலருகில் அமர்ந்தது
மறக்க முடியாத சிறந்த நாட்கள்
என் முறைப் பெண்ணை பார்த்து சிரித்து ஒதுங்கி மயங்கியது
நினைவில் நீங்காத சிறந்த நாட்கள்
இனி என் மனதில் சிறந்த நாட்கள்
முடிவெடுக்க முடியாத குழம்பி தவிக்கும் நாட்களே
சிறந்த நாட்களா இல்லையா என்று தேடும் நாட்களாக உள்ளது

கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

Wednesday 26 March 2014

பூ பூக்கும் புன்னகையே

பூ பூக்கும் புன்னகையே
பூமியிலே பிறந்தவளே
உன்னிடத்தில் உள்ளதென்ன
அந்த பிரம்மனுக்கும் தெரியவில்லை
தெரிந்திருந்தால்
அப்பொழுதே களவு செய்து
வைத்து விட்டு
கடவுளிடம் பொய்யுரைத்திருப்பான்

கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

Thursday 27 February 2014

நாணயத்தை இழந்தவன்

நாணயத்தை இழந்தவன் உலகத்தின் கண்களுக்கு
செத்தவனாகவே கருதப்படுகிறான்
வாழும் வாழ்க்கையில்
நேர்மை எது
நாணயம் எது
லட்சியம் எது
நிதானம் எது
என்பது அவன் மனதை
அறிந்தாலே புரிந்து விடும்
பார்க்கும் பார்வையில் நேர்மை
நினைக்கும் நினைப்பில் துய்மை
வாழும் வாழ்வில் எளிமை
செய்யும் செயலில் இனிமை
என்பதை இழந்தவன்
நாணயத்தை இழந்தவன் உலகத்தின் கண்களுக்கு
செத்தவனாகவே கருதப்படுகிறான்

போலி பன்னிக்குட்டி

Monday 17 February 2014

ஒளிகாட்டும் சூரியனே

பிறந்தாய் பூமியிலே வளர்ந்தாய் சூழலிலே
சுழல்வாய் வாழ்க்கையிலே சூழ்நிலையோஉன் காலடியிலே
காண்பாய் காலையிலே கதிரவனின் கனல் கூடக்கூட
அதன் குமுறலின் கூடலிலே

எழுவாய் கதிரவனின் வேகத்திலே
உனை சுற்றி இருப்பவர்களோ உன் சுழற்சி வேகத்திலே
விழுவார் பார்க்கும் பார்வையிலே
நீ பறப்பாய் வேலையிலே

இருப்பாய் நேர்மையிலே நடப்பாய் தூய்மையிலே
துணிவாய் நடப்பாய் உன் பாதையிலே
பார்ப்போர்கள் மனம் பரபரக்கும் சூழலிலே
உனை பெற்றவர்கள் தவம் கிடந்தார்களா
என உலகமே வியக்கையிலே

பொழிந்தது வானம் விளைந்தது பூமி என்பதன்
பொருளுக்கேற்ப தூய்மையான
மனம் கொண்ட தாய் தந்தையர்களுக்கு
ஒளி காட்டும் சூரியனே நீ.
இங்கு நீ என்பதே நான்

போலி பன்னிக்குட்டி