Monday 25 November 2013

என் உயிர் தாயே

தாயே

என்னை கருவில் சுமந்து ஈன்றாய் நீயே
குளிரிலும் பனியிலும் என் உடல்நலத்தை காத்தாய் நீயே
உணவையும் உறக்கத்தையும் கனிவுடன் தந்தாய் நீயே
தீஞ்சொல் பேசும் போது அன்பில் அறைந்தாய் நீயே

பள்ளிக்கு செல்ல மறுத்து அடம் பிடித்த என்னை
பலமுறை அடித்து இழுத்துச் சென்றாய் நீயே
சரியாக கல்லாத என்னை பயிற்றுவித்தாய் நீயே

பணிக்கு செல்லாமல் என் வழியில் நான் செல்ல
நெறிப்படுத்தி நேர்வழியைக் காட்டினாய் நீயே
எந்த நேரத்திலும் எந்த வேலையிலும்
என்னையே நினைத்தாய் நீயே

எனது வெற்றிக்கு படிக்கட்டாய் மாறினாய் நீயே
உனக்கு கைமாறு செய்வதற்கு நான்
எத்தனை கோடி எடுக்க வேண்டும் தாயே

தாயின் அடிமை
கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

1 comment:

  1. வரிகள் சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete