Friday 7 February 2014

பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம்

பலகோடி பணமிருந்தாலும் பக்கத்தில் பல உறவுகள் இருந்தாலும் திடீரென வந்த ஒரு வாகன சொந்தமே எதிர்பாராத மகனைப் போல மகனுக்கு காய்ச்சலோ ஜொரமோ வந்தால் கூட  சரி நாட்டு வைத்தியம் பாத்துக்கலாம் என சொல்லும் ஊருக்குள் வாழ்கிறார்கள் அந்த வாகனத்தை வழி நடத்துவதற்காக வழிப்போக்கனாக வருகிறார் விஜய் சேதுபதி 


இவர் திரையில் ஜொலிக்கிறாரா ஜொலிக்கவில்லை என்பது தான் மனதுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. இவர் மகன் என்பதா அல்லது திடீரென வந்த அந்த வாகனம் மகன் என்பதா இது தான் கதை திரைக்கதையில் அமைக்கப்பட்டுள்ள விஷயம் இதில் ஹீரோ என்று ஒரு பெண்ணைப் பெற்ற தாய் தந்தையை கூறலாமா அல்லது விஜய் சேதுபதியை கூறலாமா

ஒரே மகளைப் பெற்ற தாய் தந்தையர்கள் மகள் எது கேட்டாலும் கொடுக்கிற வழக்கமாகி விட்டது. வீட்டிற்கு வரும்போதெல்லாம் வீட்டில் இருக்கும் பொருளை எடுத்துச் செல்வதே வழக்கமாகி விட்டது. திடீரென வந்த பழமையான மகிழுந்தை மகனைப் போல நினைக்கையில், சிறு விபத்தென்றாலும் அவர்கள் மனதை பதைக்கும். 


ஒரே மகள் கேட்டாள் என்ற காரணத்திற்காக பல கனவுகளையும் ஆசைகளையும் மனதில் மறைத்துக் கொண்டு மகள் கேட்டு விட்டாலே என மகிழ்ச்சி நிறைந்த கவலையோடு மகளுக்காக கொடுக்கிறார்கள். மகளைப் பெற்ற தம்பதியருக்கு மனதில் வலி. மகனைப் போன்ற வாகனத்தை கேட்கிறார்களே, போயும் போயும் இதை கொடுத்தீர்களே என்று மகளே திரும்ப வாகனத்தை கொண்டு வந்து விட்டுச் செல்ல காரணமாக இருக்கிறார் விஜய்சேதுபதி.

திரையில் மனதை கொடும் ஒரு நிகழ்வு சிறு வயதில் இருந்து ஒரு சிறு பிள்ளை காரில் முன் இருக்கையில் அமர ஆசைப்படும் ஒரு சிறுவன் அமர முடியாமல் ஏமாற்றத்துடன் ஊரை விட்டு செல்கிறான். 20 வருடங்களுக்கு பிறகு அதே சிறுவன் விலையுயர்ந்த மகிழுந்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு வருகிறான். 

மறைவாக நின்று பார்க்கிறான். பார்த்தவுடன் மேலும் மெருகூட்டப்பட்டு மிகச்சிறப்பாக ஒரு மகன் இருந்தால் அவன் எப்படி திருமணம் முடிந்து குழந்தைகளுடன் கலகலப்பாக இருப்பானோ அந்தளவிற்கு அவர்கள் குடும்பத்துடன் அந்த மகிழுந்தும் அதற்கு உதாரணமாக விஜய்சேதுபதியும் மனைவி குழந்தைகளுடன் மகிழ்வுடன் இருக்கிறார்கள்.

இதனை பார்க்கும் அந்த பையன் மீண்டும் காரில் ஏறி மகிழ்வுடன் பயணிக்கிறான். பண்ணையாரும் பத்மினியும் நினைக்கையில் மக்களுக்கு அவர்கள் மனதிற்கு ஏற்பவாறு ஒரு மலர்ச்சி.

போலி பன்னிக்குட்டி

No comments:

Post a Comment